காசு மேலே காசு ?



அனுர அரசை தொடர்ந்தும் இந்தியா நம்பமறுத்துவருகின்ற நிலையில் சலுகைகளை அள்ளிவீசி கைகளுள் வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளது.

இந்தியா அரசின் உதவியுடன் வடக்கு ரயில் பாதையின் முழுமையான சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக ரயில் பாதை சேதமடைந்தது, அதன்படி, மஹாவாவிலிருந்து ஓமந்தை  வரையிலான ரயில் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல்  நிறுத்தப்படவுள்ளது.

இந்தியா அரசின் உதவியில்  சுமார் 5 மில்லியன் டொலர்கள் இந்த கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments