செம்மணி ஜனவரிக்கு!



நின்றுபோயுள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் தற்போதைக்கு மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியமில்லையென தெரியவந்துள்ளது.

புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் முழுமையா அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் யாழ்.நீதவான் ,சட்டவைத்திய அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று புதைகுழியினை பார்வையிட்டிருந்தனர்.

புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments