துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் பலி!



திருகோணமலையில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் 22 வது காலாட்படை பிரிவு தலைமையகத்தில் கடமையில் இருந்த சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருநாகல், மந்துராகொட, கொட்டுஹேனவைச் சேர்ந்த ஜி.ஜி.ஏ. சிந்தக பிரசன்ன கருணாரத்ன (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


No comments