மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு


கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்த நிலையில், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




No comments