தமிழரசு தனி ஓட்டம்:கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!
இலங்கை அரசுடன் தமிழரசுக்கட்சி தனித்து பேச்சுகளை நடாத்த முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் முறித்துக் கொண்ட தமிழரசுக் கட்சி ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பிற்கு கடிதம் எழுதியுள்ளமை அவர்களது நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோற்கடிக்க தமிழரசுக் கட்சியுடன் பேச முனைந்துவருகிறோம். ஏம்.ஏ.சுமந்திரன் இந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டார். நாடாளுமன்ற குழுவைத் தாண்டி கட்சியுடன் பேச நாம் முனைந்தோம்.
சீ.வி.கே சிவஞானத்தை சந்தித்தபோது அவர் ஏக்கியராஜ்யவை நாம் நிராகரித்துள்ளோம் என்று அறிவித்தார். அதன் பின்னர் சுமந்திரன் அவசரமாக செயலாளராக வந்தார். அவர் பேச்சுக்களை முறித்துக் கொண்டார்.
தமிழ்த் தேசிய தரப்பு ஒன்று கூடி பெரும்பான்மையைக் காட்டி ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும்.
ஏம்.ஏ.சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கும் வேறுபாடு கிடையாது. 13ஐ பேசி மக்களை திசை திருப்ப வேண்டாம். ஏக்கிய ராட்சியத்துக்கு எதிராக வேலை செய்ய வேண்டும். அது தேற்கடிக்கப்பட வேண்டும். தமிழரசுக்கும் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தலைமைத்துவ பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லையெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
Post a Comment