பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி சென்ற வேன் விபத்து - இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு


குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி சென்ற வேன் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு மாணவர்கள் மற்றும் வேன் சாரதி ஆகியோர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். மேலும் வேனில் பயணித்த 13 மாணவர்கள்  காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனர் 





No comments