சிந்துபாத்தியிலும் மேலுமொரு பாரிய புதைகுழி?
யாழ்ப்பாணம், செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு இருகாக மேலுமொரு பாரிய மனித புதைகுழி இருக்கலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது.தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் தொடர்ச்சியாகவே அத்தகைய சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று வியாழக்கிழமை வரை 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
புதைகுழியில் இரண்டாம் கட்டமாக நேற்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது, மேலும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டன.
மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகளில் கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு , அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே பொதுக்கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.எனினும் இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட உடல்களாகவே இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment