முன்மாதிரி:முன்னுதாரணமாக பணிகளை ஆரம்பித்தது பூநகரி
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தலைமைத்துவமாக கொண்டமைந்த உள்ளுராட்சி மன்றங்களில் பூநகரி பிரதேசசபையே இலங்கை முழுவதுமாக உள்ள சபைகளில் முதலாவதாக தனது பணியை ஆரம்பித்துள்ளது.
வடக்கிலுள்ள 37 உள்ளுராட்சி சபைகளில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையினை பெற்றுக்கொண்ட உள்ளுராட்சி மன்றங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலேயே உள்ளன.
அவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் கரைச்சி பிரதேசசபைகள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன.அதேபோன்று முல்லைதீவின் கரைதுறைப்பற்று பிரதேசசபையும் தனது பெரும்பான்மையுடன் பணிகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை மற்றும் வடமாகாணத்தில் முதலாவது சபையாக பூநகரி பிரதேசசபை மதவழிபாட்டுடனும் மதத்தலைவர்களது ஆசீர்வாதத்துடனும் எளிமையான முறையில் தனது பணியை ஆரம்பித்து பாராட்டுப்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து கரைச்சி பிரதேசசபையும் மதவழிபாட்டுடனும் மதத்தலைவர்களது ஆசீர்வாதத்துடனும் எளிமையான முறையில் தனது பணியை ஆரம்பித்துள்ளது.
Post a Comment