டக்ளஸிடம் நேரம் கேட்டுள்ள சீவீகே-சைக்கிள் சங்கு கூட்டு!



உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானமும் நேற்று தன்னுடன் தொலைபேசியில் குறுஞ்செய்தி வழி கலந்துரையாடியதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாளை  மாலை அவர்களுடன் சந்தித்து பேசவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் பிரகாஸ் என்னை சந்திப்பதற்கு பலதடவை முயற்சிசெய்தார். நாளைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவரோடு கலந்துரையாடவுள்ளதால்,  சந்திப்பின் பின்னர் அது பற்றி யோசிக்கலாம் என அவரிடம் தெரிவித்தேன் எனவும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சங்கு –சைக்கிள்  கூட்டும் தன்னிடம் பேச நேரம் கேட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கூட்டின் சார்பில்; சித்தார்த்தன் பேச நேரம் கேட்டிருந்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments