ஆசியாவின் அதிசயம்: உப்பின் விலை எகிறியது!
இலங்கையில் என்றுமில்லாத அளவில் உப்பின் விலை அதிகரித்து செல்ல தொடங்கியுள்ளது .இந்நிலையில் வடகிழக்கில் பெய்துள்ள திடீர் மழைகாரணமாக உப்பு விளைச்சல் மேலும் பாதிக்கப்படலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
திடீரென பெய்த கனமழையால் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய ஒளி இல்லாததும், தொடர்ந்து மழை பெய்வதும் தான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இலங்கையின் மொத்த உப்பு உற்பத்தியில் புத்தளம் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை பங்களிக்கிறது, மேலும் நல்ல சூரிய ஒளி உள்ள காலங்களில் 100,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான அறுவடையை உற்பத்தி செய்துள்ளது.
கடந்த பருவத்தின் கடுமையான வெப்பம் உப்பு நிலங்களில் உப்பு விளைய காரணமாகி, சிறுபோகப் பருவத்தில் அதிக அறுவடைக்கு வழிவகுத்த நிலையில், நேற்று (17) தொடங்கிய எதிர்பாராத மழையால், உப்பு அறுவடை மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
Post a Comment