கனடா மானிடோபா மாகாணத்தில் காட்டுத் தீ: அவசரகால நிலையை அறிவிப்பு
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் காட்டுத்தீ பரவியதால் நேற்றுப் புதன்கிழமை 17,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத் தீ நிலைமை காரணமாக மானிடோபா அரசாங்கம் மாகாணம் முழுவதும் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நினைவிலேயே மானிடோபாவில் காணப்பட்ட மிகப்பெரிய வெளியேற்றம் இதுவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணிகளுக்கும், மக்களை வெளியேற்றும் பணிகளுக்கும் உதவ இராணுவத்தை அனுப்புமாறு பிரதமர் மார்க் கார்னியிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
Post a Comment