கொக்குத்தொடுவாய் -அறிக்கை நீதிமன்றில்!
விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளது என நம்பப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான சட்ட வைத்திய அதிகாரி குழுவினரால் தயாரிக்கப்பட்ட முற்று முழுதான அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கொக்குளாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அகழ்ந்தெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடுகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீதிமன்ற நடவடிக்கையின் போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இறந்தவர்கள் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை மேலும் அடையாளம் காணும் முகமாக நீதவானால் காணாமலாக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிகள், காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அவர்களை கண்டறிய உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணங்களாக குண்டுவெடிப்பு, சூட்டுக்காயங்கள் இருந்தது. சில எலும்புக்கூடுகளில் சில பகுதிகளே இருந்தமையால் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
அத்துடன் வழக்கானது அடுத்த தவணைக்காக ஓகஸ்ட் மாதம் 28 ஆம் தவணையிடப்பட்டுள்ளது.
Post a Comment