கதிரை முக்கியம் குமாரு!

 


உள்ளுராட்சி சபைகளது கதிரைகளை தக்க வைப்பது தொடர்பில் எங்களுக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டது என்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸினர் அறிவிக்க விரும்பவில்லை. ஆகவே இணக்கப்பாடு இல்லை என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் சபைகள் அமைக்கின்ற விடயத்தில் இணங்கியிருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் சபைகளது ஆட்சியை கைப்பற்றவது தொடர்பில் இதுவரை காலமும் தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கும் துரோகக்கும்பல் என அடையாளப்படுத்தப்பட்ட தமிழரசுக்கட்சி தலைமையுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்க்குமிடையிலான பேச்சுவார்த்தை கொள்கை இணக்கம் இல்லாமல் முடிந்தது. ஆனால் ஆசனங்களில் முதன்மை நிலையில் உள்ள தமிழ்க் கட்சிக்கு கதிரையை பிடித்துக்கொள்ள ஏதுவாக ஆதரவு வழங்க முடிவு செய்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இன்று மாலை நடைபெற்ற  சந்திப்பில் தமிழரசுக்கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரனுடன் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் பங்கெடுத்திருந்தனர். 



No comments