டொராண்டோ பப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்
நேற்று வெள்ளிக்கிழமை டொராண்டோவில் உள்ள ஒரு பப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. மேலும் சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என்றும் தெரிவித்தனர்.
கனடாவின் மிகப்பெரிய நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பன்னிரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை. மீதமுள்ளவர்களுக்கு எவ்வளவு காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
பலாக்லாவா அணிந்த சந்தேக நபர் வெள்ளி நிறக் காரில் தப்பிச் செல்வது தெரிந்தது.
துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளைக் கேட்டு மிகவும் கவலையடைந்தேன் என்று டொராண்டோ மேயர் ஒலிவியா சோவ் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
தாக்குதலாளியைக் கண்டுபிடிக்க தேவையான அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று காவல்துறைத் தலைவர் உறுதியளித்துள்ளார்.
Post a Comment