10 பெண்கள் பாலியல் வன்கொடுமை: பிஎச்டி மாணவர் குற்றவாளி என பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளிப்பு

10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஎச்டி மாணவர் குற்றவாளி என பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பிஎச்டி படிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர், 10 பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புதன்கிழமை குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2023 இல் ஒரு பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர் அவர்  சீனாவுக்குச் சென்றார். சனவரி 2024 இல் லண்டனுக்குத் திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டார்.

2019 மற்றும் 2023 க்கு இடையில் இங்கிலாந்தில் மூன்று பெண்களையும் சீனாவில் ஏழு பெண்களையும்  பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்னர் கிரவுன் நீதிமன்றத்தின் நடுவர் மன்றம் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தது.

ஜென்ஹாவோ ஜூ என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஒன்பது பாலியல் வன்கொடுமைகளை படம்பிடித்து, பெண்களின் உடைமைகளின் தொகுப்பை நினைவுப் பொருட்களாக வைத்திருந்தார். அவர் பாதிக்கப்பட்டவர்களில் இருவரை மட்டுமே போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்தக் காணொளிகளில் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் மயக்கமடைந்திருந்தனர், ஜூவால் போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூ படம்பிடித்த வீடியோக்கள் அவரது தண்டனைக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தன.


No comments