சிரியப்படைகள் மற்றும் கிளர்ச்சியார்கள் மோதல்: 1000 பேரையில் உயிரிழப்பு
பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடிகள், இராணுவ நிலைகள், ரோந்து வாகனங்களை குறிவைத்து அல் அசாத் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கும். பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்துவரும் மோதலில் இதுவரை ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 745 பேர் பொதுமக்கள். 125 பேர் பாதுகாப்புப்படையினர். 148 பேர் கிளர்ச்சியாளர்கள் என தெரியவந்துள்ளது.
மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் கூடுதல் படைகளை சிரியா அரசு அனுப்பி வைத்துள்ளது.

Post a Comment