பிரித்தானியாசைச் சேர்ந்தவர் இலங்கையில் உயிரிழப்பு


இலங்கையின் கொள்ளுப்பிட்டி ஆர்ஏ டி மெல் மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டு குடிமக்கள் சுகயீனமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 24 வயதுடைய பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பெண்  இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஆங்கிலேயப் பெண் எனக் குறிப்பிடப்பட்டது. மற்றைய இருவரும் யேர்மனி நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் எனவும் அவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments