யோஷித ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு, கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய எதிர்வரும் வெள்ளிக்கிழமை வருமாறு குற்றவியல் விசாரணை திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரண்டரை மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து யோஷித ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment