நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள்
இன்று 27/11/2024 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாண்ட் இல் மாலை 6.30 மணியளவில் பெருந்திரளான மக்கள்
இன் நிகழ்வுக்கு பல்வேறுபட்ட நியூசிலாந்து தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
பொதுச்சுடரானது நெடுங்கால தமிழீழ ஆர்வலர் ரத்தினவேல் ஆறுமுகப்பெருமாள் அவர்களால் ஏற்றப்பட்டது.
நியூசிலாந்து தேசிய கொடியினை நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாள் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சுமதி அவர்களால் ஏற்றப்பட்டது.
தமிழீழ தேசிய கொடியினை லெப்டினன்ட் கேணல் இலக்கியா அவர்களின் தாயார் ரூபேனா ஜோன் மேரி அவர்களால் ஏற்றப்பட்டது.
தமிழீழகொடி ஏற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது.
மாவீரர் நாள் மரபின் படி மணியோசை இசைக்கப்பட்டது. பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஈகைச்சுடரனது மாவீரர் கப்டன் அறவளதிஅவர்களின் சகோதரி திருமதி கேஜின் ஏற்றிவைத்தார்.
பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதையாய் வீழ்ந்த மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தினர். மேலும் நியூஸிலாந்தில் வசித்துவரும் பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாவீரர் தூபி அமைக்கப்பட்டு, உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும். தொடர்ந்து மாவீரர்களின் திருவுரு படங்களால் சூழப்பட்ட அரங்கத்தினுள்ளே நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.
பின்னர் தமிழீழ எழுச்சி பாடல்கள், எழுச்சி நடனம், நாடகம் என பல கலை நிகழ்வுகளோடு சிறப்புரையுடன் மாவீரர் நாள் சிறப்புற நிறைவுற்றது.
Post a Comment