மாங்குளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு


முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் மேலுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மாங்குளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் விதுசன் (20 வயது), ஜெயகுமார் விதுசன்( 23 வயது ) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். மரியதாஸ் சுவாமிகீர்த்தி (31 வயது) எனும் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.  

மாங்குளம் பகுதியில் இருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் ,மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி 

வந்த மோட்டார் சைக்கிளும், வன்னிவிளாங்குளம் ஐந்தாவது மைல் கல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை  இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments