சுவிஸ் பெண்ணை தாக்கி சுமார் இரண்டரை கோடி ரூபாய் கொள்ளை
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்ற குடியேறியுள்ளார்.
அந்நிலையில் இலங்கையிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக இலங்கை வந்து, தனது வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீட்டின் யன்னல் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள், பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து 72 ஆயிரம் ஸ்விஸ் பிராங் (இரண்டு கோடி 40 இலட்சம்) மற்றும் 1 1/4 பவுண் தங்க சங்கிலியும் 29,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment