வென்றாலும் ராஜினாமா செய்வேன்:சிறீதரன்!

 


எனக்கு மதுபான சாலை உள்ளது அல்லது நான் யாருக்கும் மதுபான சாலைக்கு சிபாரிசு செய்தேன் என்பதை மதுவரி திணைக்களம், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட தரப்புக்கள் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தினால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என் சிவஞானம் சிறீதரன் சவால் விடுததுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் என் மீதான மதுபான சாலை விவகாரம் தொடர்பான சர்ச்சை உள் கட்சியினராலேயே முதலில்  எழுந்தது. அது வெளிக் கட்சியால் செய்யப்படவில்லை. தமிழ் பொது வேட்பாளரை நான் ஆதரிக்க எடுத்த முடிவு காரணமாக அது உள் கட்சியினரால் கிழப்பப்பட்டது.

ஆதனை முன்வைத்து எம்.ஏ.சுமந்திரன் இம்முறை சிறீதரன் தேர்தலில் போட்டியிடக்கூடாது என கட்சியில் வாதிட்டார். ஊடகங்களுக்கும் சொன்னார். என்னை கேட்கக் கூடாது என என்னிடமும் தெரிவித்தார். அதனை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அதை கட்சி மத்திய குழுவே தீர்மானிக்கும் என்றேன்.

கிளிநொச்சியில் மதுபானசாலைகள் அதிகரித்துள்ளது. வாக்கு கோருவதற்கு கிளிநொச்சிக்கு வந்து பிரசாரம் செய்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கிறார்கள் மதுபான சாலை அனுமதிப்பத்திரம் வழங்கி திறக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு; தான் பார்க்கவில்லை என குற்றஞ்சாட்டுவது அழகல்ல. 

எனக்கு மதுபான சாலை இல்லை என்பதை சத்தியக்கடதாசி மூலம் வெளிப்படுத்த தயார். யாராவது எனக்கு மதுபான சாலை உள்ளது அல்லது நான் யாருக்கும் மதுபான சாலைக்கு சிபாரிசு செய்தேன் என்பதை உறுதிப்படுத்துங்கள். மதுவரி திணைக்களம், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட தரப்புக்களின் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தினால் எனது பதவியை ராஜினாமா செய்வேன். 

சென்ற வருடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழில் போட்டியிட்ட போது 3 ஆசனங்களை பெற்றது. இம்முறையும் மூன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை யாழில் பெறுவோம் - எனவும் சி.சிறீதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


No comments