எமது இறையாண்மைக்கு எதிராகதென்கொரியா செயற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்கமாடோம் - கிம்
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைதயக்கமின்றி பயன்படுத்துவதாக உறுதியளித்துள்ளதாக, KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை சிறப்புப் படைகளின் பயிற்சித் தளத்திற்கு விஜயம் செய்த கிம், வட கொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் தயக்கமின்றி அணு ஆயுதங்கள் உட்பட அது வைத்திருக்கும் அனைத்து தாக்குதல் சக்திகளையும் வெளிப்படுத்தும் என்றார்.
அத்தகைய நிலை வந்தால், சியோல் மற்றும் கொரியா குடியரசின் நிரந்தர இருப்பு சாத்தியமற்றது,” என்று தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ பெயரைப் பயன்படுத்தி கிம் கூறினார்.
வட கொரிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது வட கொரிய ஆட்சியின் முடிவுக்கு வழிவகுக்கும் என்று தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் எச்சரித்தார்.
தென்கொரியாவின் இராணுவ திறன்களை கிம்மின் சகோதரியும் மூத்த அதிகாரியுமான கிம் யோ ஜாங் நேற்று வியாழக்கிழமை கேலி செய்தார். வட கொரியாவின் அணுசக்தி படைகளை வழக்கமான ஆயுதங்களால் எதிர்கொள்ளும் திறன் தென் கொரியாவால் இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.
Post a Comment