இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் - புதிய பிரதமர் கருத்து!
பெரும்பாலும் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டதுடன் கடமைகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளது.
பின்னர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
பெரும்பாலும் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும்.
எனவே, அதற்கு முன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Post a Comment