இத்தாலியில் வீடு இடிந்து விழுந்தது: தாய் இரண்டு குழந்தைகள் பலி!

தெற்கு இத்தாலியின் நேபிள்ஸ் மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த

குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

கட்டிடம் இடிந்து விழுந்ததில் தாய், அவரது 6 வயது மகன் மற்றும் அவரது 4 வயது மகள் உயிரிழந்தனர். தந்தையும் 2 வயது மகனும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் பாட்டி என்று நம்பப்படும் ஒரு பெண் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை மங்கிவிட்ட போதிலும், அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிவாயு வெடித்ததால் இக்கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம்  என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

கட்டிடம் தானாக இடிந்து விழுந்தாக மேயர் வின்சென்சோ சிமோனெல்லி சம்பவ இடத்தில் இருந்து தெரிவித்தார்.

கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அது இடிந்து விழுந்ததாகவும், கீழ் தளம் இடிபாடுகளால் மூடப்பட்டதாகவும் அவ்விடம் தூசி மேகம் எழுவது போல் காட்சியளித்தாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

15,000 மக்கள் வசிக்கும் இவ்விடங்களிலும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக சாட்சிகள் தெரிவித்தனர்.

No comments