கோத்தா பழிவாங்கியவர்களிற்கு பதவிகள்: அனுர அதிரடி!



இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (23) சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் ராஜபக்ச தரப்புக்களால் பழிவாங்கி ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள அதிகாரிகளிற்கு பதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

செனவிரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆவார்.

புதிய பாதுகாப்புச் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

துயகோந்தா 33 வருடங்களுக்கும் மேலான சேவையை முடித்து 2021 நவம்பர் 26 அன்று இலங்கை விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.

.


No comments