தமிழரசு தலைவர்கள் பாயத்தொடங்கினர்!
தமிழரசுக் கட்சியின் இரண்டாம் மட்ட இளம் தலைவர்கள் பலரும் சஜித் பக்கம் சாய தொடங்கியுள்ளனர்.
அவ்வகையில் தமிழரசு முன்னாள் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மகன் மற்றும் சாவகச்சேரி முக்கியஸ்தர் ஒருவர் என பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.
மாவை சேனாதிராஜாவின் புதல்வரான கலை அமுதனும் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் சஜித் பிரேதமாச வடமாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment