வவுனியாவில் 285,000 ரூபாவுக்கு விற்பனையான மாம்பழம்


வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ஆம் நாள் மாம்பழத் திருவிழா நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது விநாயகருக்குப் படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோயில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

பலத்த போட்டிக்கு மத்தியில் 285,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments