கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ!
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் வெற்றிகரமாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இலங்கை துறைமுக அதிகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு இன்னும் மதிப்பிடப்படாத நிலையில், சரக்கு மற்றும் கப்பலுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுக அதிகார சபை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள கப்பல் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இக்கப்பலிலேயே தீ விபத்து ஏற்பட்டது.
துறைமுக அதிகாரசபையின் கூற்றுப்படி, குறித்த கப்பலில் இருந்து 995 கொள்கலன்களை இறக்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மேலும் 880 கொள்கலன்களை கப்பலில் ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Post a Comment