சூடானில் துணை இராணுவத்தினரால் 80 பேர் படுகொலை!!
மத்திய சூடானில் உள்ள சின்னார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாக ஒரு தன்னார்வக் குழு தெரிவித்துள்ளது.
சின்னார் மாநிலத்தில் உள்ள (அபு ஹுஜார் பகுதி) ஜல்க்னி கிராமத்தில் ஐந்து நாள் முற்றுகைக்குப் பின்னர் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகள் இத்தாக்குதலை நடத்தியது.
ஆர்.எஸ்.எஃப் கிராமத்தில் இருந்து சிறுமிகளை கடத்த முயன்றதை அடுத்து இப்படுகொலைக்கு நடத்தப்பட்டது. இதனை குடியிருப்பாளர்கள் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பே படுகொலைக்கு வழிவகுத்தது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடிமக்களின் எதிர்ப்பிற்கு RSF போராளிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு மற்றும் வீடுகளைத் தாக்கியதன் மூலம் பதிலளித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆர்எஸ்எஃப் இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
ஜூன் மாதம் முதல் RSF மாநிலத்தின் தலைநகரான சிங்க உட்பட சின்னார் மாநிலத்தின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் சூடான் ஆயுதப் படைகள் (SAF) கிழக்கு சின்னார் பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, சின்னார் மாநிலத்தில் நடந்த சண்டையில் 725,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
சூடான் ஏப்ரல் 15, 2023 முதல் SAF மற்றும் RSF இடையே ஒரு கொடிய மோதலை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக குறைந்தது 16,650 உயிர்கள் பலியாகியுள்ளன.
சமீபத்திய ஐநா தரவுகளின்படி, சுமார் 10.7 மில்லியன் மக்கள் இப்போது சூடானில் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 2.2 மில்லியன் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Post a Comment