சாணக்கியனிற்கு 60கோடி:டெலோ கடுப்பு
ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 60 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளார் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
காசுக்காக ஒரு தமிழ் பொதுவேட்ப்பாளரை களமிறக்கியுள்ளதாக சாணக்கியன் தெரிவித்துள்ளமை சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழரசு கட்சியின் அனுமதி இன்றியே சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை செய்வேன் என்ற உத்தரவாதத்தை ரணிலுக்கு வழங்கி இருப்பதனால் தான் ஜனாதிபதி இவ்வளவு பாரிய தொகையை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் தேர்தலுக்காக கட்சியின் முடிவின்றி இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளவர் குறித்து மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment