ஆளுக்கொரு கதிரை தயார்!
தனது யாழ்ப்பாண பயணத்தினில் வீடு வீடாக ஆதரவு கோரும் பயணத்தினை ரணில் முன்னெடுத்துள்ளார்.ஆனாலும் சந்திக்கின்ற தரப்புக்கள் அனைத்தும் ஆளுக்கொரு பதவியை கோரிவருவதாக தெரியவருகின்றது.
முன்னதாக நேற்றைய தினம் சுதந்திரக்கட்சி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயனை சந்தித்து ரணில் ஆதரவு கோரியபோது பதிலுக்கு அவர் அமைச்சு பதவி கோரியுள்ளார்.மகிந்த தரப்பு தம்மிக்கவிற்கு ஆதரவானவரென அடையாளப்படுத்தப்பட்ட அங்கயன் தற்போது ரணில் தரப்பில் இணைந்துள்ளார்.
அதேவேளை தற்போதைய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவோ மீண்டும் புதிய அமைச்சரவையில் கதிரை கேட்டு தனது சிறீதர் திரையரங்கிற்கு ரணிலை இன்று அழைத்து கௌரவித்துள்ளார்.
இதனிடையே வடமாகாண ஆளுநர் கதிரைக்காக போராடிவரும் முன்னாள் கூட்டமைப்பின் எம்பியான சரவணபவன் தனது பத்திரிகை அலுவலகத்திற்கு ரணிலை இன்று அழைத்து கௌரவித்துள்ளார்.அவரிற்கு ஜனாதிபதி தேர்தலின் பின்னராக ஆளுநர் பதவிக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment