இலங்கை தொழிலாளர் யாருக்கு?



எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூடவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென்ற முடிவு எட்டப்படவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டு உறையாற்றும் போது அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

அதாவது எதிர்வரும் 18ஆம் திகதி கொட்டகலை வாளாகத்தில் கூடவுள்ள தேசிய சபையினூடாக 2024ஆம் ஆண்டின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக இந்த தேசிய சபை கூடவுள்ளதாக இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments