மன்னாரில் மீண்டும் இராணுவ சோதனைச் சாவடி!


மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில்  சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில்  தற்போது மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – அத்துருகிரிய பிரதேசத்தில், கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலைச்  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், மன்னாருக்கு சென்று கடல் மார்க்கமாக  இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகப்   புலனாய்வுத்  துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத்  தகவலையடுத்தே குறித்த சோதனைச் சாவடி மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments