உள்ளுராட்சி தேர்தல்:பேச்சு மூச்சில்லை!
கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், அதன் தீர்ப்பு அறிவிப்பை ஒத்திவைத்தது.
இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.
மனுவை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய ஜன பலவேகயா, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு ஆகியவை தாக்கல் செய்திருந்தன.
கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment