மத்தி டெல்லியா? கொழும்பா?-குழப்பத்தில் ஈபிடிபி!
மத்தியிலுள்ள அரசுடன் இணக்கமாக பேசி தீர்வை பெறப்போவதாக சொல்லி இணக்க அரசியல் நடாத்திவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தற்போது பிரதமர் நரேந்திர மோடி தீர்வை பெற்றுத்தர கோரியுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டதால் அகிம்சை போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக வலுப்பெற்றது.பின்னர் இந்நிய இலங்கை ஒப்பந்தத்துடன் இலங்கை தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான மாகாண ஆட்சி முறைமை கொண்டுவரப்பட்டது.
ஆனால் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபை ஆட்சிமுறையில் காணி காவல்துறை அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப்பெறப்பட்டது.இந்நிலையிலும் இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி.யினர் தமிழர்கள் ஒரு நிலத் தொடர் அலகாக வாழ்வதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று வழக்க தாக்கல் செய்து பிரித்தனர்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக பாரத தேசத்தை பொறுப்பேற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரரேந்திர மோடி அரசு இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் தலைமையேற்று முழுமையாக பங்காற்ற வேண்டுமென ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பான அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு நலன்சார்ந்து இந்தியாவே இருந்து வருகின்றது. 1983 இனக்கலவரம்முதல் இன்றைய பொருளாதார நெருக்கடி வரையும் இந்தியாவே தமிழ்களுக்கு பக்கபலமாக இருந்தவருகின்றது.
அதேபோன்று தற்போது பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முழுமையாக பங்காற்ற வேண்டும் என ஈபிடிபி கோரியுள்ளது.
Post a Comment