சுத்துமாத்து :எனக்கு சரிவராது-டாண் குகநாதன்!

 


பொதுவேட்பாளர் முயற்சியை முடக்கி ரணிலிடம் மீண்டும் நல்லாட்சி கால கல்லா கட்ட சுமந்திரன் மும்முரமாகியுள்ளார்.

அதற்கேதுவாக  நாளை ஞாயிற்றுக்கிழமை தானும் நிகழ்வொன்றை நடாத்த சுமந்திரன் தனது அல்லக்கைகள் மூலம் முற்பட்டுள்ளார்.

இந்நிகழ்விற்கு முக்கிய பிரமுகராக ஆளுநர் முதலமைச்சர்  என ஆண்டுக்கொரு கனவுடன் திரியும் டாண் தொலைக்காட்சி உரிமையாளர் குகநாதனை தெரிவு செய்துள்ளார்.

எனினும் தனது சம்மதம் இன்றி அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள டாண் குகநாதன் தான் நிகழ்வில் பங்கெடுக்க போவதில்லையென அறிவித்துள்ளார்.

இதனிடையே நாளை நிகழ்வினை அறிவிக்க பல்லாயிரக்கணக்கில் பணம் செலவு செய்து நாளிதழ்களில் விளம்பரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  .




No comments