உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தாக்குதல்!!

உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. 70க்கு மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கியேவ் உட்பட ஆறு நகரங்களில் எரிசக்தி உள்கட்டமைப்பை வசதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா 50 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 20 ஈரானில் தயாரிக்கப்பட்ட "ஷாஹித்" ட்ரோன்களை ஏவியது.

Lviv, Zaporizhzhia மற்றும் தெற்கு மற்றும் மேற்கு உக்ரைனின் சில பகுதிகள் இலக்குகளில் அடங்கும். தாக்குதலின் போது எட்டு வயது சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் தரப்பினர் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் மேலும் 10 விழுக்காடு மின்சார உற்பத்தி இல்லாமல் போயுள்ளது.

No comments