ரணிலுக்கு ஆதரவில்லை:செல்வம் !



ரணில் விக்கிரமசிங்க அமைக்கவுள்ளதாக கூறப்படும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென அவரது நண்பரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஊடாக எடுக்கும் முயற்சி சரியாக இருக்குமா என்ற விடயம் ஒருபுறம் இருந்தாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. சண்டையிட்ட தரப்பே அது தொடர்பிலான விசாரணைகள் நடத்துவதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். சர்வதேச கண்காணிப்போடு விசாரணைகள் நடைபெற வேண்டும். அதனை நாம் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கின்றோம். அப்போதுதான் ஒரு நியாயம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைக்கப்படும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சர்வதேச கண்காணிப்பு  இருக்க வேண்டும்.அப்படி இருக்கின்றபோதுதான் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும். கடந்த காலங்களில் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் அமைக்கப்படட நிலையில் அவற்றை நம்பி எமது மக்கள் கருத்துக்களை சொன்னார்கள். இரகசியங்களை சொன்னார்கள். ஆனால் ஆணைக் குழுக்கள் கலைந்து போவதே இடம்பெற்று வந்தது.

இப்போது மீண்டும் புதிதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது.

அதனை முற்று முழுதாக நாம் எதிர்க்கின்றோம்.இந்த நேரத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவது தேர்தலை நோக்கியதா என்ற கேள்வி எழுகின்றது. ஆணைக்குழுவில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இல்லை என்றால் அது கானல் நீராகவே இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


No comments