பாரதிபுரம்:26வருடங்களின் பின்னர் நீதி!



திருகோணமலையின் பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்த பாரதிபுரம் காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 காவல்துறையினருக்கு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீடொன்றில் வீடு குடி புகுதல் நிகழ்வின்போது 8 தமிழர்கள் ஆயுதம் தாங்கிய இலங்கை காவல்துறை குழுவின் மேற்பார்வையில் சிங்கள கடையர்களால் 26வருடங்களிற்கு முன்னதாக சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட தம்பலகாமம் – பாரதிபுரம் எனும் கிராமத்தில் 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டு, குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட அன்றைய காலப்பகுதியில் கந்தளாய் பாரதிபுரம் காவல்; நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய காவல்; பரிசோதகர், உப பரிசோதகர் மற்றும் 3 காவல்துறை சார்ஜன்ட்களுக்கே ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.


No comments