பூநகரியில் 10 கிலோ வெடிமருந்துடன் ஒருவர் கைது


கிளிநொச்சி - பூநகரி பகுதியில் 10 கிலோ சி - 4 வெடி மருந்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான வெடிமருந்தை , மோட்டர் சைக்கிளில் கடத்தி செல்வதாக பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு , மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மடக்கி பிடித்தனர். 

குறித்த நபரிடம் இருந்து 10 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்தை மீட்டனர். அதனை அடுத்து நபரை கைது செய்து பூநகரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments