13 வெங்காயமானது?
அரசியல் தீர்விற்காக இந்தியாவிடம் பேரம் பேசிய இலங்கை அரசு தற்போது வெங்காயத்திற்காக பேரத்தை ஆரம்பித்துன்ளது.
இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 1,000வாக அதிகரிக்ககூடும் என இறக்குமதியாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெங்காயம் இறக்குமதிக்கு இந்தியாவிடம் இராஜதந்திர கோரிக்கை விடுக்காவிட்டால், விலை உயர்வு அதிகரிக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயத்தின் இன்றையசில்லறை விலையாக 700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கையிருப்பில் உள்ளதாகவும், பாகிஸ்தானின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் வெங்காய இறக்குமதி நிறுத்தப்பட்டதே காரணம் என்றும் வெங்காய இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா தனது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்து சில மாதங்கள் ஆகியும், அதற்கு மாற்றாக பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, தற்போது அந்த நாட்டில் வெங்காய இருப்பு முடிவடைந்ததால் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அதேவேளை பங்களாதேஸ் மற்றும் துபாய்க்கு இந்தியாவின் ஏற்றுமதி மாதத்திற்கு 50,000 மெட்ரிக் டொன்களாக வரையறுக்கப்பட்டுள்ளது மொத்த விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை அரசாங்கமும் தலையிட்டு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்க முடியும் எனவும், அரசாங்கத்திடம் பல தடவைகள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கொழும்பு பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment