முடியாது:கைவிரிப்பு!



இலங்கை கடற்பரப்பிற்குள் தவறுதலாக நுழைந்து மீனவர்களை கைதுசெய்யாதிருக்குமாறு தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதுடன், தொடர்ச்சியான கைதுகளும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஒரு தசாப்ததுக்கும் மேலாக மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இராஜதந்திர மட்டத்தில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், இதுவரை எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை.

அண்மையில், ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில், இரண்டு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைதுசெய்து வருவதை கண்டித்து பாரிய போராட்டங்களை தமிழக மீனவர்கள் முன்னெடுத்ததுடன், கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணித்தனர்.

No comments