யாழில். நிமோனியாவால் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென மயங்கி விழுந்த இளைஞனை வீட்டார் மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
விசாரணைகளில் நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment