மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது என்று மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே சடலம் சிக்கியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
Post a Comment