மன்னார் பண்டிவிரிச்சானில் சுடரேற்றி வணக்கம் செலுத்திய மக்கள்

மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட  மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி யுள்ளனர்.

பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதன் போது மாவீரர்களின் உறவுகள் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,அரசியல் பிரதி நிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு   கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments