நாளை பாடசாலைகள் இல்லை!





நாளை வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டள்ள பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

தமிழ் கட்சிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  நாளை நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை உறுதிப்படுத்துவது நம் எல்லோருடைய கடமை ஆகும்.

எனவே, நாளைய தினம் நடைபெறவுள்ள பாடசாலைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு, கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

யதார்த்த பூர்வமான முடிவு எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கின்றோம். எது எப்படி இருந்தாலும், பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் நாளை புறக்கணிக்குமாறு எமது மாணவச் செல்வங்களை உரிமையோடு வேண்டிக் கொள்கின்றோம். பெற்றோர்களின் ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம் என்றுள்ளது.

இதனிடையே நாளைய கடையடைப்பிற்கு பல்வேறு தரப்புக்களும் தமது ஆதரவை தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments