தாழையடி தண்ணீரே வருகின்றது!



யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் வழங்கலுக்காக  கடல் நீரை சுத்திகரித்து நன்நீராக்கி யாழ் கொண்டுவரும் திட்டத்திற்கான  பாரிய வேலைத்திட்டம். யாழ்ப்பாணம் தாழையடியில் மும்முரமாகியுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் முன்னெடுக்கப்படுவதாக சொல்லப்படும் திட்டத்திற்கு உள்ளுரில் எதிர்ப்புக்கள் கிளர்ந்திருந்த போதும் அதனை தாண் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஏற்கனவே இரணைமடு குடிநீர் திட்டம் யாழிற்கு முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து கடல் நீரை சுத்திகரித்து நன்நீராக்கி யாழ் கொண்டுவரும் திட்டத்திற்கான  அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  




No comments