முழங்காவில் மதுபான விற்பனை நிலையம் அமைக்க இடைக்காலத் தடை




கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில்,  செல்வ யோக சித்திவிநாயகர் ஆலயத்திற்கு பின்புறத்தில்  உள்ள காணியில் அமைக்கப்படவிருந்த மதுபான  விற்பனை நிலையத்திற்கு 14 நாட்கள் இடைக்காலத்  தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அண்மைக்காலமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அத்துடன் இது குறித்து  கிளிநொச்சி நீதிமன்றத்திலும்  வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தனர்.

இவ்வழக்கில்  பொதுமக்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன், அப்பகுதி பொருத்தமற்றது எனவும், குறித்த பகுதியில் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில்  வாதத்தினை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த மதுபான விற்பனை நிலையத்தை திறப்பதற்கு நீதிமன்றம்  14 நாட்கள் இடைக்கால தடை உத்தரவு  பிறப்பித்துள்ளதாகவும் ,   எதிர்வரும் 20ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments