ஆலய தேர் திருவிழாவில் தீ விபத்து - பூசகர் உயிரிழப்பு


அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசகர் ஒருவர் தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த ஆசிர்வாதன் சுந்தர் குமரன் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments